Wednesday, April 28, 2010

தேடல்!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
மடைதிறந்த வெள்ளம்போல்
மனக்கதவு திறந்ததடி!
படைகள்பல வந்தபோதும்
பாசம்மட்டும் மிஞ்சுதடி!
விடைகாணா கேள்விகளை
வினவமனம் அஞ்சுதடி!!

என்னுள்ளே கடவுளுமுண்டு!
என்னுள்ளே மிருகமுண்டு!
'நான் யார்?'என்ற கேள்விமட்டும்
நாட்கணக்காய் நீளுதடி!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுதடி!
உண்மையிலா உலகத்திலே!!
கள்ளமும் கபடமும்
களியாட்டம் போடுதடி! - இதை
கவனிக்க யாருமிலையோ!!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!

No comments: