Saturday, April 24, 2010

காதலெனும் மதம்!

சிலைகளை வைத்து
வழிபடுவது
இந்துமதம்!

சிலுவையை வைத்து
வழிபடுவது
கிறித்துவமதம்!

உருவமில்லாமல்
திசைகளை வைத்து வழிபடுவது
இசுலாமிய மதம்!!

ஆனால்...
காதலெனும் மதத்தில்
மட்டுந்தான்
வழிபடும் நாமே
கடவுளாய்!

உதாரணத்திற்கு
என்மீது அன்புகாட்டுவதால்
நீ எனக்குக் கடவுள்!
உன்மீது அன்புகாட்டுவதால்
நான் உனக்குக் கடவுள்!!

No comments: