Sunday, April 25, 2010

அன்பின் தவிப்பில்...

பிரிவின் கொடுமையை
பிரியும் அக்கணத்தில்
உணரமுடிவதில்லை!

நான்கு சுவர்களுக்குள்
நானும் என்தனிமையும்!

ஊருக்குத் திரும்பும் நாளை
நாட்காட்டியில் எண்ணிக்கொண்டிருக்கும்போதே
நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கி...

அம்மாவின் அரவணைப்பிலும்
அப்பாவின் அதட்டலிலும்
வாழ்ந்தகாலம்!

அம்மாவின் அன்பு
மறுபிறப்பு எடுத்தது!
அக்காவின் வடிவில்...

அப்பாவின் அதட்டல்
அழியவில்லை அன்று!
அண்ணனின் கண்டிப்பில்...

தங்கையின் குறும்புகளில்
வாழ்ந்து கொண்டிருந்தது
என்சிறுவயது சேட்டைகள்!!

அன்னை தந்தையின் இழப்பு
அதிகம் பாதிக்கவில்லை
அன்றென்னை!

கடந்தகாலம் நிகழ்காலமாகி
நிகழ்காலம் நினைவுகளானது!!

உதிரத்தில் கலந்த உறவுகளை
உயிர்தேடி அலையும்போது
உணர்கிறது மனம்!
பிரிவின் கொடுமையை!!

1 comment:

Anonymous said...

பிரிவு பற்றிய நல்ல விவரணம் நல் வாழ்த்து. வாருங்கள் என் வலைக்கு நல்வரவு! கருத்தும் பதியலாம்.
வேதா. இலங்காதிலகம்.