Sunday, April 25, 2010

ஞாயிறு!

எந்திர வாழ்க்கைக்கு
இன்றொருநாள் விடுதலை!

பட்டம் விட்டு
கொட்டமடிக்கும்
சிறுவர்கள்...!

கடலை கொறிக்கும்
விடலைகள்...!

நெடுநாள் பிரிந்த
நண்பர்களின் கூட்டம்...!

கவிதை
எழுதத் தூண்டும்
வனப்பு...!

ஈரக்காற்றில்
மேனியின் சிலிர்ப்பு..!

இவையெல்லாமே
இயற்கையின் சிறப்பு...!!

கிழக்கே உதிக்கும் ஞாயிறால்
உலகிற்கு வெளிச்சம்!
வாரக்கணக்கில் உதிக்கும் ஞாயிறால்
மனதிற்கு வெளிச்சம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் - 31-01-2008

 2. மகாகவி - 28-05-2012

No comments: