Saturday, April 24, 2010

என்னோடு வா!

அரிதாரம் பூசாத
அழகியே!

என் மடிமீது சாயும்
மகாராணியே...!!

உன் கண்ணுக்கழகு
கண்ணாடியா?!
அழகுக்கே நீ
முன்னோடியா?!!

தரிசாய்க் கிடந்த என்னை
பரிசுவாங்க வைத்துவிட்டாய்!!

உன் வதனம்போலவே
உன் கையெழுத்தும் அழகானது!
என் தலையெழுத்தைப்போலவே
என் கையெழுத்தும் ஆனது!!

உன்
வெட்கச்சிவப்பைப்பார்த்து
மருதாணியும் தோற்றுவிட்டதடி!

உன்னைப் போலவே
என்னையும் அழகாக்க
என்னோடு வா!!

No comments: