Sunday, April 25, 2010

அன்பெனும் உணர்வு!

உன்னை நான்
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?

நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!

உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!

காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!

உண்மைதான்!
காரணகாரியங்காட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!

No comments: