Saturday, April 24, 2010

தெரியுமா உனக்கு?

உனைப் பார்ப்பதற்காகவே
உன் வீட்டிற்கு வந்தேன்!
நுழைந்த உடனேயே
நலம் விசாரித்தாய்!

உன் முகம் பார்த்தேன்!
கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

எனக்கு
அன்னமிட்டன
உன்னிரு கைகள்!

அள்ளி அள்ளி வைத்தாய்!
வயிறு நிறைந்தும்
போதுமென்று சொல்ல
மனம் வரவில்லை எனக்கு!

அங்கிருந்த
புகைப்படத்தில்
பள்ளிச்சீருடையணிந்து
நீ..!

திருடலாமென்று
தீர்மானித்தேன்!

உன் இதழோர
நகைப்பை மட்டுமே
திருட முடிந்தது என்னால்!

அங்கு நான்
வருவதற்கு முன்பிருந்தே
நானுனை நேசித்திருக்கிறேனென்று
தெரியுமா உனக்கு?!!

No comments: