Sunday, April 25, 2010

தனிமையில்...

2006 ம் ஆண்டு ஒருநாள் வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது அவளிடம் பேச போனேன். அவளுடைய தோழிகள் அவளருகில் அதிகமாய் இருந்தனர். 'நான் தனியே இருக்கும்போது என்னோடு பேசு சுரேஷ்' என்று செல்லமாய் கடிந்துகொண்டாள். அவள் சொன்ன வார்த்தைகளை வைத்தே எழுதிய கவிதைஇது.


என் உத்தரவின்றி
என்னுள்ளே நுழைந்தவள்
நீ!

உத்தரவிடுகிறாய்
'என்னிடம்
தனிமையில் மட்டும்
பேசுடா' என்று!

அடிப் பைத்தியமே...
இத்தனை நாளாய்
தனிமையில் தானடி
பேசுகிறேன் உன்னிடம்!!

No comments: