Wednesday, May 19, 2010

உன்னை...

உன்னை 'காற்று' என்றேன்!
என் இதயத்தை
வேரோடு சாய்ப்பவளாகத்தான்
இருக்கிறாய்!

உன்னை 'மழை' என்றேன்!
என்னை
வெள்ளத்தால் அழிப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கடல்' என்றேன்!
சுனாமியாய் தாக்கிக்கொண்டுதான்
இருக்கிறாய்!

உன்னை 'குயில்' என்றேன்!
முகம் காட்ட மறுப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'வான்மதி' என்றேன்!
தொடமுடியாத தூரத்தில்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கவிதை' என்றேன்!
வார்த்தைகளை மறைப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'என்காதலி' என்பேன்!
என்ன செய்வதாய்
இருக்கிறாய்?

No comments: