Tuesday, May 25, 2010

என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

நீ சிரித்துப் பார்க்காவிட்டாலும்
சினம்கொண்டாவது
என்னைப் பார்!

நீ மலையளவு பார்க்காவிட்டாலும்
சிலையாகவாவது
என்னைப் பார்!

நீ
கலையாகப் பார்க்காவிட்டாலும்
கடுகளவாவது
என்னைப் பார்!

என்னைப் பார்
காதலியே...
என்னைப் பார்!

No comments: