Thursday, May 20, 2010

வேண்டுதல்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதி என்னிடமே வைத்துக்கொண்ட மூன்றாவது கவிதை.

உன் தொலைபேசிக்குரல்வரம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் சிறுசிறு தவறுகள்
இனிவேண்டாம் உனக்கு!!

உன் மழலைப்பேச்சு
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் கோமாளிப் பேச்சு
இனிவேண்டாம் உனக்கு!!

உன் சிறுசிறு கோபம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் இதயவலியின் தாக்கம்
இனிவேண்டாம் உனக்கு!!

உன்போல் பிஞ்சுமனம் புரியும்குனம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
உன்வதனம் வாடிய கொடுமை
இனிவேண்டாம் உனக்கு!!

உயிர் உருக்கும் இந்த நட்பு
எப்போதும் வேண்டும் எனக்கு!
உயிர் எடுக்கும் இந்தப் பிரிவு
இனிவேண்டாம் நமக்கு!!

No comments: