Tuesday, May 25, 2010

முடியும்!

நீரால் மட்டுந்தான்
உயிர்கள் வாழமுடியும்! - ஆணி
வேரால் மட்டுந்தான்
மரங்கள் வாழமுடியும்!!

வந்தனையால் மட்டுந்தான்
சொந்தங்கள் நிலைக்கமுடியும்! - புதுச்
சிந்தனையால் மட்டுந்தான்
கனவுகள் ஜெயிக்கமுடியும்!!

வீரனால் மட்டுந்தான்
நம்தேசம் வாழமுடியும்! - தமிழ்
ஈழனால் மட்டுந்தான்
தமிழ்தேசம் வாழமுடியும்!!

என்னவளே...
உன்னால் மட்டுந்தான்
என்கவிதைகள் சிறக்கமுடியும்!!

No comments: