Sunday, May 16, 2010

கதை சொல்லவா?

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!

எனக்கு
கிடைக்கவில்லை
வேலையென்று...
பணியவில்லை
பணியென்று...
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கே
வேலைதேடிச் சென்ற
கதை! - என்
கதை!!

என் வீட்டுப் பூட்டிற்கு
கிடைக்கவில்லை
சாவியென்று...
தொலைந்துபோனது
திறவுகோலென்று...
திருடனிடத்திலே
சாவிகேட்ட
கதை! - என்
கதை!!

என் நாட்டில்
வீழ்ந்துபோனது
வீரமென்று...
மறந்துபோனது
மறமென்று...
சாகப்போகும் கோழையிடமே
வீரம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் பசிக்கு
கிடைக்கவில்லை
உணவு என்று...
அழிந்துவிட்டது
ஆகாரமென்று...
பூதத்திடமே
உணவு கேட்ட
கதை! - என்
கதை!!

என் துன்பத்திற்கு
அமையவில்லை
ஆறுதலென்று...
இனியில்லை
இன்பமென்று...
காலத்திடமே
ஆருடம் கேட்ட
கதை! - என்
கதை!!

என் உயிருக்கு
கிடைக்கவில்லை
உடல் என்று...
மெய்யில்லை
மெய்யென்று...
மந்திரவாதியிடமே
புது உடல் கேட்ட
கதை! - என்
கதை!!

என் கவிதைகட்கு
வறண்டுவிட்டன
வார்த்தைகள் என்று...
செத்துப்போனது
சந்தமென்று...
கவிதையான
என் காதலியிடமே
வார்த்தைகள் கேட்ட
கதை! - என்
கதை!!

கதை சொல்லவா தமிழனே! - புதுக்
கவிதை சொல்லவா தமிழனே!!

No comments: