Friday, May 7, 2010

சித்திரம் பேசுதடி!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

உன்நெஞ்சம் தஞ்சமென்றே
என் ஆவியும் போனதடி!
என்நெஞ்சில் உன்நினைவே
பத்திரம் ஆனதடி!!

உன்னுருவம் எங்கென்றே
என் கண்களும் தேடுதடி!
என்பருவம் புரியாமலே
என்கவிதையும் பாடுதடி!!

பேருந்து பயணத்தினாலே
என்வாழ்க்கையும் மாறுதடி! - நாம்சேர
ஆருடம் ஒன்றைத்தானே
என்வார்த்தையும் கூறுதடி!!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

No comments: