Friday, May 21, 2010

மூன்றெழுத்து கடவுள்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

என்னை செதுக்கிய
உளியாய்...
என்னை ஆளும்
அரசியாய்
இருப்பவள் நீதான்!

தமிழ் வார்த்தைக்கோர்
அகராதியாய்...
என்னைக் கவிஞனாக்கிய
கவிதையாய்
இருப்பவள் நீதான்!

என் வாழ்வில் விளக்கேற்றிய
காரிகையாய்...
என் நாட்டில் பறக்கும்
தேசியக்கொடியாய்
இருப்பவள் நீதான்!

என்னுள் பூத்திருக்கும்
வாடாமலராய்...
என்னைக்கூட அழகாக்கிய
அரிதாரமாய்
இருப்பவள் நீதான்!

என் தமிழ்மண்ணின்
தங்கத்தாரகையாய்...
என்வானில் குளிரும்
நிலவாய்
இருப்பவள் நீதான்!

என் இடப்பக்க
இதயமாய்
எனக்கு உயிர்கொடுக்கும்
சுவாசமாய்
இருப்பவள் நீதான்!

இத்தனை மாற்றங்களும்
உனக்கு புரியும்வரை
என்னுள் மனப்போராட்டம்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

No comments: