Saturday, May 1, 2010

இறைவன்!

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!

ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!

மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!

காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!

உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!

அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!

கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006

1 comment:

Anonymous said...

இறைவன் பற்றிய பல பரிணாமம் நன்று. பணி தொடர வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.