Sunday, May 16, 2010

உன்மடியில்...

நீ பட்டாம்பூச்சிதான்!
நெருங்குகிறேன்
பறந்துவிடுகிறாய்!!

நீ கண்ணாடிதான்!
பார்க்கிறேன்
சிதறிவிடுகிறாய்!!

நீ மழைதான்!
மேகமாய் கறுக்கிறேன்
உன்னைக் காணவில்லை!!

நீ நீர்க்குமிழிதான்!
தொடுகிறேன்
உடையப்பார்க்கிறாய்!!

நீ கவிதைதான்!
எழுதத்துடிக்கிறேன்
வார்த்தையாய் உன்
கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை!!

நீ வான்மதிதான்!
அழைக்கிறேன்
எட்டாத்தூரத்தில் தான் இருக்கிறாய்!!

நீ குயில்தான்!
குரல்மட்டும் கேட்கிறது
பார்க்கமுடிவதில்லை!!

காதலின் முடிவு
மரணம்தான் என்றால்
மரிக்க சம்மதம்
உன் மடியில்...

No comments: