Sunday, May 16, 2010

பிறந்திருப்பேன்!

நீராய் பிறந்திருப்பேன்!
உன்தாகம் தீர்க்க...

காற்றாய் பிறந்திருப்பேன்!
உன் இதயம் துடிக்க...

மரமாய் பிறந்திருப்பேன்!
உனக்கு நிழல்தர...

மழையாய் பிறந்திருப்பேன்!
நீ நனைந்துமகிழ...

கனியாய் பிறந்திருப்பேன்!
உன்பசி போக்க...

பூவாய் பிறந்திருப்பேன்!
உன்கூந்தல் மணம்வீச...

செருப்பாய் பிறந்திருப்பேன்!
உன்பாதம் காக்க...

கால்கொலுசாய் பிறந்திருப்பேன்!
உன் அசைவில் சிணுங்க...

ஆனால்...
என்ன செய்வது?
மனிதனாய் பிறந்துவிட்டேனே!!

இன்னும்பல ஜென்மங்கள் கேட்பேன்!
இவையனைத்தையும் நிறைவேற்ற...

No comments: