Sunday, May 16, 2010

சந்தோசம் தானெனக்கு!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

இரவான
என் மரணமுடிவில்தான்
பகலான நீ பிறக்கிறாய்!
நீ தினம்தினம் பிறக்க
நான் பலமுறை மடிவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

சூரியனான
என் ஒளிகொஞ்சம் வாங்கி
வான்மதியான நீ
குளிர்விக்கிறாய் மானுடத்தை!
நீ தினம்தினம் ஒளிகொடுக்க
நான் தவறாமல் உதிப்பேன்!
சந்தோசம் தானெனக்கு!!

இசைக்கருவியான
என் உதவிகொஞ்சம் வாங்கி
கவிதை வரிகளான நீ
வருடுகிறாய் பிறரிதயத்தை!
நீ மென்மேலும் சிறக்க
நான் மெதுமெதுவாய் அதிர்வேன்!
சந்தோசம் தானெனக்கு!!

மரமான
என் அசைவில் துவங்கி
காற்றான நீ
வாழவைக்கிறாய் உயிர்களை!
உன் சேவை துவங்க
நான் சுறுசுறுப்பாய் அசைவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

No comments: