Monday, June 14, 2010

விடியலை நோக்கி...

சிவம் பெரிதா?
சிலுவை பெரிதா?
தொழுகை பெரிதா?

நிறுத்துவோமே சமயப்பூசலை!
திறப்போமே இதயவாசலை!!

மனஉறையில் உள்ள
மதக்கறைகளை
புதுப்பறையடித்து
தனிச்சிறையில் வைப்போம்!

சமயம் பார்த்து
சமயங்களை சாய்ப்போம்!

சாதிக்காய்கள் போதைதருவதுபோல்
சாதிப்பேய்கள் பேதைகளாக்குகின்றன
நம்மை!
சாகடிப்போம் சாதியை!!

தீர்த்துக்கட்டும் தீவிரவாதத்தை
தீயிலிட்டுக் கொளுத்துவோம்!

உறுதிதரும் குருதியால்
உள்ளங்கள் இணையட்டும்! - அன்பு
வெள்ளங்கள் பொங்கட்டும்!!

சிரிப்பதை குறைப்போம்!
சிந்தித்து செயல்படுவோம்!!

இந்தியாவின் விடியல்
இளைஞர்கள் கைகளில்...

No comments: