Monday, June 14, 2010

என் வாழ்க்கை!

2005 ம் ஆண்டிலிருந்து நான் கவிதைகல் எழுத துவங்கினேன். நான் பலமுறை என்னுடைய கவிதைகளை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பியும் முதல் முறை வெளிவர சற்று கால தாமதமானது. அந்த வருத்தத்தில் நான் எழுதியது.


மாற்றத்தைத் தருவது பொதுவாழ்க்கை!
ஏமாற்றத்தைத் தருவது என்வாழ்க்கை!!
தூக்கத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
துக்கத்தைக் கொடுப்பது என்வாழ்க்கை!! - மனிதனோடு
ஒட்டிவாழவைப்பது பொதுவாழ்க்கை!
எட்டாக்கனியைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
அமுதத்தைக் கொடுப்பது பொதுவாழ்க்கை!
அழுகையைக் கொடுப்பது என்வாழ்க்கை!!
கதைசொல்ல வைப்பது பொதுவாழ்க்கை!
கவிதைசொல்ல வைப்பது என்வாழ்க்கை!!

No comments: