Friday, June 25, 2010

முயற்சி(யை) விதை!

உனக்குள் ஒருவன்
இருக்கிறான் என்பதை
உணர்ந்துகொள் நண்பா!

இருக்கும் ஒருவனை
சிறந்தவனாக்க
முடிவெடு நண்பா!

உயிரினில் கலந்த
உறவுகளை நினைத்து
வருந்தாதே நண்பா!

தற்செயல் தோல்விகளை
தூள்தூளாக்கு நண்பா!

முன்னேற்றக் கேள்விகளை
உன்னுள் கேட்டுப்பார் நண்பா!

முயற்சி விதையை
விதைத்துப்பார் நண்பா!

வியர்வைத் தண்ணீர்
பாய்ச்சு நண்பா!

நீ விடும் கண்ணீர்
வேலைக்கு ஆகாது நண்பா!

மிருக குணத்தை
களையெடு நண்பா!

கடவுள் குணத்தை
காப்பாற்று நண்பா!

காலங்கள் கனியும்
காத்திரு நண்பா!
வெற்றி கிட்டும்
மகிழ்ச்சிகொள் நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இலங்கை வானொலி – 17-09-2006

No comments: