Friday, June 25, 2010

என்ன சொல்லப்போகிறாய்?

நீ என்காதலை ஏற்பாயா? - இல்லை
நான் என்காதலில் தோற்பேனா?
அருகிலிருந்தே உடலை
வேகவைக்கிறாய்! - என்னை
விரும்பாமலே உயிரை
சாகவைக்கிறாய்!!

என் கண்ணில் விழுந்தது உன் பிம்பம்!
என் மனதில் என்றுமே தீராத துன்பம்!!

கண்களின் மோதலால் பிறந்த நம்காதல்
உள்ளங்களின் தேடலால் முடிவது வேண்டாம்
காதலி!

நிறைவேறாத காதல்!
கரைசேராத ஓடம்!
உவமையில் பழமை இருக்கிறது! - அந்தப்
பழமையில் புதுமை நம் காதல்!!

பேருந்து நகர - என்விழிகள்
உன்னை நுகர - என்னுள்
நுழைந்தது காதல்! - நமக்குள்
வேண்டாமே ஊடல்!!

உன் புகைப்படம்
வேண்டாமே கண்மணி!
உன் புன்னகை
மட்டும் போதும் வெண்மதி!!

No comments: