Thursday, June 24, 2010

காதல் யாசகம்!

உன்னை நினைத்து
கண்ணீர்வழி அழுகிறேன்!
கவிதைவழியும் தொழுகிறேன்! - காலையில்
காதல்வலியுடன் எழுகிறேன்!!

காதலைப் பற்றி யோசித்தேன்!
கன்னியுனை நேசிக்கிறேன்!!

தேங்கிய நீரில்
என்றுமே படியும் பாசம்! - என்னுடலில்
தேங்கிய உயிரில்
என்றுமே படியும் உன் பூவாசம்!
என்னகமெலாம் உன்வசம்!
என்றுமே நீதான் என்சுவாசம்!!

No comments: