Friday, June 25, 2010

எப்படி நுழைந்தாய்?

தாய்வயிற்றிலே பிறந்து – பெண்ணுனை
பேருந்திலே கண்டு
தமிழ்க் கவிதையால் சிறந்து - மண்ணுலகில்
தன்னிலையும் மறந்து - காதலால்
விண்ணிலே மிதந்து
வெற்றுடலாய் வாழ்கிறேன் நான்!

கரைமீறும் காட்சிக்கு வண்ணமாய்
தமிழ்க் கவிதை கிண்ணமாய்
காவியக் காதலின் சின்னமாய்
அழகுக்கொரு திண்ணமாய்
என்னுயிரில் கலந்த எண்ணமாய்
என்னுள் அமைதியாய் வாழ்கிறாய்!
என்றுமே அளவாய்த்தான் சிரிக்கிறாய்!!

என்னிடம் சொல்லாமலே சென்றாய்!
என்னைக் கொல்லாமலே வென்றாய்!
என்னுயிரைக் கொஞ்சம்கொஞ்சமாய் தின்றாய்!
விழிவழி தள்ளித்தான் நின்றாய்!!

நீ விழிவழி நுழைந்தவளா? - இல்லை
நீ விதிவழி நுழைந்தவளா??

மூளையும் உருகி வழிகிறது!
யோசிக்கிறேன் நான்! - என்னுள்
எப்படி நுழைந்தாய் நீ??

No comments: