Friday, August 27, 2010

உயிர் செல்லும் பாதை!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?
என் உறவைக் கொல்லும் பாதை காதல்!
இந்த மானுடத்தைக் கொல்லும் பாதை காதல்!!

உன்னை நினைத்து நினைத்து
கண்களில் வழிந்தோடுகிறது இரத்தம்!
மரத்துப் போனது என்னிதயம்! - உன்னை
மறக்க மறுக்கிறது என்னிதயம்!!

மனம் வெதும்பி நின்றேன்!
கண்ணீர் ததும்ப சென்றேன்!!

சொல்லிலே இன்பந்தான்! - உன்னால்
உள்ளத்திலே துன்பந்தான்!!

காதலை உணர்ந்தேன்! - என்னுள்
கவிதை பிறந்தது!! - நீ
என்னை உணர்ந்தால்
உன்னுள் காதல் பிறக்கும்!!

இளமையில் வேகம்!
முதுமையில் சோகம்!
உன்மேல் கொண்ட காதலெலாம்
வாழ்விலொரு பாகம்!!

என் உயிர் செல்லும் பாதை எங்கே?

No comments: