Wednesday, August 11, 2010

எழுந்து வா நண்பா!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!

ஒரு பெண்ணை
காதலிக்கத் தெரிந்த உனக்கு
இம்மண்ணில்
சாதிக்கத் தெரியாதா என்ன?
எழுந்து வா நண்பா!!

தமிழனக்கு
அச்சத்தை துச்சமென
மதிப்பது வழக்கம்!
விடிந்தபின்னும்
ஏன் இன்னும் உறக்கம்?
எழுந்து வா நண்பா!!

முயற்சி முயற்சி முயற்சி!
இதுதானே வெற்றியின் பயிற்சி!
இறுதிவரை போராடினால்
உறுதியாய் உனக்கு வெற்றி!
எழுந்து வா நண்பா!!

உன்னில்
ஒன்றும் இல்லை
எனும் சொல்லை
இனி நீநினைத்தால்
உனக்கது தொல்லை!
எழுந்து வா நண்பா!!

தொடங்கியதை முடிக்க
தொடர்ந்து போராடு! - வீட்டில்
முடங்கிக் கிடந்தால்
முன்னேற முடியாது!
எழுந்து வா நண்பா!!

மண்ணைக் கொஞ்சம் தட்டி
விண்ணைக் கொஞ்சம் முட்டி
மனவுறுதியைப் பற்றி
ஏங்கும் போராடு சுற்றி!
உனக்கிறுதியாய் வெற்றி!
எழுந்து வா நண்பா!!

எழுந்து வா நண்பா!
அழுத கதை போதும்!
பிறர் கால்தொட்டு
தொழுத கதை போதும்!
எழுந்து வா நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-05-2006

2. இலங்கை வானொலி – 25-06-2006

No comments: