Friday, August 27, 2010

பாரதி!

ஜாதியை மறந்தவன்!
சாதிக்கப் பிறந்தவன்!!
கண்ணில் தீப்பொறி பறக்க - தமிழ்
மண்ணில் புதுநெறி பிறக்க
கவிதைகள் பல எழுதி
புவிதனை ஆளப்பிறந்தவன்!
பெண்ணுரிமை காக்க
விண்ணுயர குரல் எழுப்பியவன்!
மதங்கொள்ளாமல்- ஜாதி
மதங்களை கொல்லத்துடித்தவன்!
அன்று இயற்கையை இரசித்தவன்
இன்று இயற்கைஎய்தி விட்டான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-10-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 12-03-2007

No comments: