Monday, September 20, 2010

உன்னிடம்தான் பேசுகிறேன்!

neural networks external exam க்கு படித்துக் கொண்டிருந்த போது எழுதிய கவிதை. நான் விடுதியில் அமர்ந்தபோது அவளை நினைத்து அழ ஆரம்பித்தேன். என் அழுகையைப் பார்த்து இயற்கையும் அழுதது. அதாவது மழை பெய்தது.


கவிதைவழி உன்பெயரெழுதி
காற்றுவழி என்னுயிரனுப்பி
புவிதனிலே அன்பைத்தேடி
புலம்பித்தள்ளும் புலவன்நான்!
செவியிரண்டால் சுவாசம்செய்து
சேர்த்துவைத்த ஆசைக்காதல்
புவிதனிலே மாண்டபின்னே
பூலோகம் அழுததென்ன!!

மழலையாய் வாழ்ந்துவிட்டு
மங்கையுன்னைக் கண்டபின்னே
உலகைப் புரிந்துகொள்ள
உன்னால்வழி பிறந்ததடி!
வில்லெடுத்து வீரத்தில்
விளைந்தவன் ஏகலைவன்! - தமிழ்ச்
சொல்லெடுத்து கவிஎழுதிச்
செல்கிறான் உன்தலைவன்!!

No comments: