வானம் உடுத்தும்
நாணத்துகிலோ
முகில்!
கதிரவன் உடுத்தும்
நாணத்துகிலோ
அந்திச்சிவப்பு!
மேகங்கள் இசைக்கும்
இராகங்களோ
இல்லை
மேகக்காதலர்களின்
ஊடல்தானோ
இடி!
மழையரசி வந்துபோனதன்
அடையாளம்தானோ
வானவில்!
முகில்சிந்தும் தண்ணீரும்
மனிதன் சிந்தும் கண்ணீரும்
இயற்கையின் நியதி!
மனிதனை
இன்பத்தையும் துன்பத்தையும்
சமமாய்ப் பார்க்கச்சொல்லி
அமைதியாய் வாழ்கிறது
இயற்கை!!
No comments:
Post a Comment