Monday, September 20, 2010

வெற்றி உன்வசம்!

கடந்துவந்த பாதை
காவியமாகலாம்!
நட்பில்
களங்கம் இல்லாதவரை...

உதடுகள் பேசாக்
காதல்கூட
உயிரை உருக்கலாம்!
காதலில்
கண்ணியம் குறையாதவரை...

கண்ணீரில் வாழ்ந்த
வாழ்க்கைகூட
கானல்நீராய்ப் போகலாம்! - நாளை
உன்னத நிலையை அடையலாம்!!
காலங்கள் மாறிக்கொண்டிருக்கும்வரை...

உன் கண்ணீர்த்துளிகள் கூட
நாளை வைரங்களாய் மாறலாம்!
உன்னில்
தன்னம்பிக்கைத்தீ
கொழுந்துவிட்டு எரியும்வரை...

உன் கைகள் அசைந்தால்கூட
வெற்றி உன்வசமாகலாம்!
உன்னில் முயற்சிவேள்வி
அணையாதவரை...

No comments: