என்னுயிரின் அகரமே!
பொறுமையின் சிகரமே!!
என்னை
பத்துமாதம் சுமந்தாலும்
உனக்கென
சொத்துசுகம் தேடவில்லையே நீ?!!
உடலில்லா உயிருக்கும்
உயிரில்லா உடலுக்கும்
மதிப்பில்லை இவ்வுலகில்!
என்னுடலில் என்னுயிராய்
என்னுயிரின் என்னுயிராய்
இருப்பவளே...!!
அம்மா என்ற சொல்லுக்கிணையாய்
அகிலத்தில் வேறு சொல்லில்லையே
அம்மா!!
அம்மா!
அந்தப் பெயரிலேயே
அன்பு தெரிகிறது பார்!!
தாலாட்டுப் பாட்டில்கூட
பூபாளங்கள் இசைக்கிறாயே
தாயே!!
இன்னும்பல ஜென்மங்களில்
உன்மகனாகவே பிறக்க
வரம்கொடு தாயே!
உன் காலடிபட்ட மண்ணில்
ஆலயங்கள் பல எழுப்ப...
No comments:
Post a Comment