என் சிறுவயது முதலே நான் கறுப்பாக இருப்பதால் என்னை அனைவரும் 'காக்கா, காக்கா' என்றே அழைத்தனர்.
கண்ணீரில் கரையும் காகமடி!
தண்ணீரில் உறையும் மேகமடி!!
கண்களின் மோதலால் காதலடி!
பெண்களில் நீயொரு புதுக்கவிதையடி!
வெட்கத்தில் நீஉலக அழகியடி! - என்
பக்கத்தில் நீசிறு குழந்தையடி!!
என்னுள் தமிழ்மங்கையாய் வந்தாயடி!
எனக்கு கவிதைகங்கையை தந்தாயடி!!
வாழ்க்கையை புரிய வைத்தாயடி! - ஒரு
வார்த்தையைக் கூற மறந்தாயடி!!
அளவாய்த்தான் சிரித்தாயடி! - என்
உலகைத்தான் அழவைத்தாயடி!!
கவிஞனென்று சொன்னாயடி! - என்னையுன்
கணவனென்று சொல்வாயா நீ?
No comments:
Post a Comment