Wednesday, September 22, 2010

பிரபஞ்ச அழகி!

2005 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி சனிக்கிழமை அவள் வீட்டிற்கு போயிருந்தேன். மதிய உணவு உண்டேன். அதன்பிறகு அவளிடம் 'கண்ணாடி எதற்கு அணிகிறாய்?' என்று கேட்டேன். 'எனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி' என்றாள். கண்ணாடி அணிந்த அவள் எவ்வளவு அழகாய் இருப்பாள் தெரியுமா? என் குட்டிப்பாப்பா தேவதையை, என் செல்லக்குழந்தையை அப்டியே என் மடியில் தூக்கி வைத்து செல்லங்கொஞ்ச வேண்டும் போல் இருக்கு. 




 உலகத்தை ஆள்பவன் இறைவன்! - காதல் 
கலகத்தை உண்டாக்கி - எனை கவிஞனாய் மாற்றியவள் நீதான்! 

 என் பக்கத்தில் நின்று 
என்னால் வெட்கத்தில் சிவப்பவளே... நீ சொர்க்கத்தில் பிறந்தவளா...?!! - இல்லை நீ ஆண்வர்க்கத்தைக் கொல்பவளா...?!!!! அமைதியாய் வந்து - 
என்னுள் புயலை வீசவைத்து - காதல் தயவில் வாழவைத்த தமிழச்சி நீதான்!! இலக்கின்றி வாழ்ந்த என்னை - தமிழ் இலக்கியத்தில் மூழ்கவைத்த இலக்கியமானவளே...!!! 

 என்தலைவியான உனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி! உன்னால்தான் எனக்கு இதயவலி!! 

 உன் கண்ணுக்கழகு கண்ணாடியா?!!! அழகுக்கே நீ முன்னோடியா?!! 

 மழையால் சிரபுஞ்சி அழகு! 
உன்னால் இந்த பிரபஞ்சமே அழகு!!

No comments: