Saturday, March 26, 2011

தங்கைக்கொரு வாழ்த்து!

என் தங்கச்சி மகாலட்சுமி கண்ணுக்குட்டிக்காக நான் எழுதிக்கொடுத்த கவிதை இது.


பிள்ளைக் கனியமுதே!
பேசாத தெள்ளமுதே!!
முல்லைக் கொடியழகே!
மூன்றாம் பிறையழகே!!

வெட்கச் சிரிப்பழகே!
வெகுளித் தனமழகே!!
நட்புக்கு அணிகலனே!
நாவிலுதிருந் தமிழழகே!!

கொஞ்சும் கொலுசழகே!
கண்ணின் மணியழகே!!
பிஞ்சு விரலழகே!
பிறைசூடா பொட்டழகே!!

மெழுகுச் சிலையழகே!
மென்மை மனமழகே!!
பழமை மறவாத
பெண்மைத் தனமழகே!!

அறந்தாங்கி வீதிதனில்
ஆலோல பாட்டழகே!
இரக்க குணமழகே!
ஈகையிற் சிறந்தவளே!!

சிற்சில தருணங்களில்
சிரிக்கும் பொற்சித்திரமே!
பற்பல தருணங்களில்
பரிவுகாட்டும் இரத்தினமே!!

என்தங்கையென வந்தவளே!
அவனிதனில் சிறந்தவளே!!
பெண்மங்கை நீநீடூழிவாழ
பெருமையுடன் வாழ்த்துகிறேன்!!

No comments: