Wednesday, August 31, 2011

தங்கையின் கேள்வி!

உனைப்பற்றி
நான் எழுதும் கவிதைகளை
ஒன்றுவிடாமல்
படித்துவிடுவாள் என்தங்கை!

உன்னிடம் தொலைபேசியில்
பேசியபோது
என் தங்கையிடம்
பேசச் சொன்னேன்!
அவள் உன்னோடு
பேசிமுடித்தவுடன்
விளையாட்டுக்கு
கைகொட்டி சிரித்தாள்!
‘அவள் குரல்
பெண்குரல் போல் இல்லையே?
இனிமையாக இல்லையே?’
என்று...

எனக்கு அவள்மீது
கடுங்கோபம் வந்து
திட்டிவிட்டு
அடிக்க கை ஓங்கிவிட்டேன்!
அழுவிட்டாள் அவள்!!

சிறிதுநேரம் கழித்து
என்னிடம் சொன்னாள்!
‘ஏண்ணே
அவள்மீது உனக்கு
இவ்வளவு அன்பா?’
என்று...

No comments: