Sunday, August 28, 2011

உள்ளன்போடு ஒரு கடிதம்!

ஒருமுறை பாண்டிலக்ஷ்மிம்மாவும் என் காதல் தேவதையும் காரைக்குடி புகைவண்டி நிலையம் வந்திருந்தனர். பட்டுக்கோட்டையில் உள்ள என் மகேஸ்வரி அக்காவை பார்க்கவேண்டுமென்று நானும் புகைவண்டி நிலையம் வந்திருந்தேன். என் குட்டிப்பாப்பா தேவதை என்னைப் பார்த்ததும் ஓடிப்போய் ladies carriage ல் அமர்ந்து கொண்டாள். எனக்கு வருத்தமாக இருந்தது. ‘நானும் ladies carriage ல் போகிறேன் சுரேஷ்’ என்று பாண்டிலஷ்மி ம்மா சொன்னாள். எனக்கு மேலும் வருத்தமாக இருந்தது. என் முகம் வாடியதை பார்த்ததும் பாண்டிலக்ஷ்மி ம்மா தன் முடிவை மாற்றிக்கொண்டாள். எனக்கு எதிரே அமர்ந்தபடி வந்தாள். அடுத்த இரண்டுநாளில் தீபாவளி (2005 m ஆண்டு). என்னை மகிழ்விக்க வேண்டுமென்று நினைத்து என் பாண்டிலக்ஷ்மிம்மா ஒரு தாய் தன் குழந்தையிடம் விளையாடுவது போல் ‘சுரேஷ், உனக்கு விசிலடிக்கத் தெரியுமா? பாட்டுப்பாடத் தெரியுமா?’ என சிறுகுழந்தை போல் என்னிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒருபக்கம் ‘என் பாண்டிலக்ஷ்மி ம்மா என்னிடம் என்னை அவள் மகனாகவே நினைத்து விளையாடுகிறாள்’ என மனதிற்குள் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் ‘நான் என் காதல் தேவதையை நினைத்து ஏமார்ந்துவிடக் கூடாது என நினைத்து அவளை பாண்டிலக்ஷ்மி ம்மா ladies carriage ல் போகச் சொல்லியிருப்பாளோ?’ என்ற சந்தேகமும் என்னுள் எழுந்தது. ‘எனக்கு நல்லது செய்வதற்காக அக்கா நாரதர் வேலையெல்லாம் செய்கிறாள் போல. நாரதர் கலகம் நன்மையில் முடியும்.’ என்று நினைத்தபடி அக்காவிடமே ‘நாரதர் வேலையெல்லாம் செய்கிறாய் போல’ என்று சொன்னது தான் தாமதம். பாண்டிலக்ஷ்மி ம்மா என்னிடம் கோபப்பட்டு கொட்டித்தீர்த்து விட்டாள். அதன்பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை. ‘வீட்டில் எல்லோரையும் கேட்டதாக சொல்லுப்பா’ என்று சொல்லிவிட்டு அம்மா அறந்தாங்கி வந்ததும் இறங்கி நடந்து போனாள். அன்று பட்டுக்கோட்டைக்கு போனபிறகு தூக்கம் வராமல் மொட்டைமாடியில் உலவிக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதையிது.


என்
இளைய சொந்தத்திற்கு
உள்ளன்போடு ஒரு கடிதம்!
நல்ல பண்போடு ஒரு கடிதம்!!

‘நீ
நாரதர் பணிசெய்கிறாய்! – எனக்கு
நல்லது செய்கிறாய்!!’
என்றேன்! – உன் அமைதியை
நானா கொன்றேன்?!!

உடனே
சினந்துவிட்டாய் நீ!
சினத்தில் உன்நிலை
மறந்துவிட்டாய் நீ!
அறந்தாங்கி வந்ததும்
இறங்கிவிட்டாய் நீ! - என்னை
உறங்க விட்டாயா நீ?!!

அக்கணத்தில் கரைந்தது ஒருகாகம்!
உன்சினத்தால் உறைந்தது என்தேகம்!
என்மனத்தில் என்றுமே வெறும்சோகம்!
உன்மனத்தில் குளிர்கிறதே வெண்மேகம்!!

உன்பிரிவால் பொங்கியது என்னுள்ளம்!
என்னுள்ளத்தில் தேங்கியது அன்புவெள்ளம்!!

இனிவேண்டாமே நமக்குள் சண்டை!
நீதான் என்அக்காவுக்கு தங்கை!!

உன் கோபத்தால்
என்னுள்ளத்தில் பெரும்காயம்!
அவள் காதலால்
என்னுயிரில் ஈட்டி பாயும்!
என்று என்னுடல்
மண்ணில் மாயும்?!!

No comments: