Sunday, August 28, 2011

வருந்தாதே அக்கா!

பாண்டிலக்ஷ்மி அக்காவைப் பற்றி மேற்சொன்ன அதே தாக்கத்தில் தோன்றிய கவிதை தான் இதுவும்.


வருந்தாதே அக்கா!
வருங்காலம் நமக்குத்தான்!! – உன்
பொருந்தாத இதயத்தோடு
போராடு கவலையேன்?

பிஞ்சிலே பழுத்ததேன்று
பிதற்றுவது மானுடம்! – நம்பாசம்
நஞ்சையே அமுதாகும்
நான்சொல்லும் ஆருடம்!!

உள்ளத்தில் என்னவளை
ஊற்றிவிட்டேன் நாளும்! – அன்பு
வெள்ளத்தில் உன்னால்
வியக்கிறேன் போதும்!!

எனக்காக வருந்திய
உன்பாசம் புரியுதம்மா எனக்கு!
உனக்காக அழுகிறேனே
என்நேசம் புரியாதாம்மா உனக்கு?

No comments: