Saturday, August 27, 2011

பாண்டிலக்ஷ்மி அக்கா!

என் இளைய அக்காவே!
பாசத்தின் மொத்த உருவமே நீதான்!
நேசத்தின் சொந்தக்காரியே நீதான்!!

நட்பின் நாணயத்தைக் காத்து
கற்பின் கண்ணியத்தைக் காத்துநிற்கும்
புண்ணியவதி நீதான்!!

படிப்பதில் படுசுட்டிதான்! – அன்பால்
துடிப்பதில் படுகெட்டிதான்!!

என்னைப்போலவே
கறுப்பாய் பிறந்தாலும்
பட்டைதீட்டாமல்
ஜொலிக்கும் வைரம் நீதான்!

இளைய அக்கா என்றாலும் – எனை
தழைக்க வைத்த தாயல்லவா நீ!!

அறந்தாங்கியில் பிறந்த உன்னை
சிரந்தாழ்த்தி வணங்குகிறேன் தாயே!!

நீ என் அக்காவா? இல்லை
நீ என் அம்மாவா?
தனிமையில் யோசித்துப் பார்க்கிறேன்! – உன்னிடம்
அன்பை மட்டும் யாசித்துத் தோற்கிறேன்!!

No comments: