Wednesday, August 31, 2011

மழலைத்தமிழ்!

‘எம்பு கக்கிதும்மா
எம்பு கக்கிதும்மா’
என்று
அழுதது குழந்தை!

பதறிப்போய்
‘எங்கடா எறும்பு?
எங்கடா எறும்பு?’
என்றாள் தாய்!

வயிற்றைத் தடவியபடி
வேறு எதுவும்
சொல்லத்தெரியாமல்
மறுமுறையும் சொன்னது
குழந்தை
‘எம்பு காக்கிதும்மா’
என்று!

வேகுநேரமாய்
எறும்பைத் தேடியவள்
பின்னர்தான் தெரிந்துகொண்டாள்
தன் குழந்தைக்கு பசிக்கிறது
என்பதை...!!

No comments: