Wednesday, August 31, 2011

உனக்கான அறிவுரை!

ஒவ்வொரு நிற சுடிதாரிலும்
நீ
ஒவ்வொரு அழகாகவே
தெரிந்தாய்!
நம் தோழியின் திருமணத்திற்கு
நீ சேலைகட்டி வந்ததை
நான் பார்த்திருக்கிறேன்!

சோளக்காட்டு பொம்மைக்கு
சேலையை கட்டிவிட்டது போல்...
ஓட்டடைக்குச்சிக்கு
சேலையை சுற்றிவிட்டது போல்...

சற்றுபலமாய் காற்றடித்தால்
பக்கத்தூருக்கு
பறந்து விடுவாய் போல...!!

இப்படியாடா
புல்தடுக்கி பயில்வானாய்
இருப்பது?

ஒழுங்காய் சாப்பிடுடா
என் செல்லம்!!

No comments: