Wednesday, August 31, 2011

எப்படி?

என்னம்மா
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!

இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!

பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-02-2012

2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012

3. இராணிமுத்து -  01-09-2012

1 comment:

மனதோடு மன்னூரான் said...

நன்று! வளர்க உங்கள் கவிதையும் காதலும்!