Wednesday, August 31, 2011

மனமெனும் குரங்கு!

கொட்டும் மழையில்
குடைகள் இன்றி
உனக்கும் எனக்கும்
நனைந்திடப் பிடிக்கும்! – கைக்

கெட்டும் தொலைவில்
வானம் வந்தால்
வளைத்துப் பிடித்து
வானவில் செய்வோம்! – மனக்

கட்டுப் பாட்டை
நாமும் வளர்த்தால் – நம்
கட்டளைப் படியே
மனமும் கேட்கும்! – கொஞ்சம்

விட்டுப் பிடிப்போம்
என்றே நினைத்தால்
கொட்டிக் கவிழ்க்கும்
மனமெனும் குரங்கு!!

No comments: