Sunday, August 28, 2011

அன்பிற்கு நான் அடிமை!

MCA நான்காம் பருவத்தில் அந்த மரத்தடி நிழலில் விசாலம் அக்கா, கல்பனா, இன்னும் சிலர் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பர். எனக்கு மிதிவண்டி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் விசாலம் அக்காவும் கல்பனாவும் முகம் சுளிக்காமல் கொடுத்து உதவுவார்கள். ஐந்தாம் பருவத்தில் அவர்களை காணவில்லை. அப்போது தோன்றிய கவிதை இது.


அன்பிற்கு நான் அடிமை! – உங்கள்
அன்பிற்கு நான் அடிமை!!

எப்போதும் சிரித்தீர்கள்! – நட்பால்
என்மனம் பறித்தீர்கள்!!

அடிக்கடி விளையாடினாலும்
நொடிக்கொருமுறை நலம் விசாரிப்பீர்கள்!!

மரத்தடி நிழலில் – உங்கள்
சிரிப்பொலி கேட்கும்! – இனி
சிரிப்பொலி கேட்குமா? – என்
உயிர் மெல்ல சாகுமா??!!

No comments: