Sunday, August 28, 2011

கல்பனா!

கார்த்திகேயன் அண்ணன் கல்பனாவைப் பற்றி சொன்ன அடுத்த நாளே அவளைப் பார்த்து அவளிடம் சரவணராஜ் அண்ணனை பார்த்ததாக சொன்னதுதான் தாமதம். கன்னாபின்னாவென்று திட்டிவிட்டாள். அருகில் விசாலம் அக்கா இருந்தாள். மறுநாள் விசாலம் அக்காவிடம் விளக்கிச் சொன்னேன். அவளும் கல்பனாவிடம் சொல்லியிருந்திருப்பாள் போல. சிலநாள் கழித்து நான் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். ‘sorry suresh’ என்று கத்தினாள். நான் ‘எதற்குப்பா?’ என்றேன். ‘உன்னை திட்டியதற்கு sorry’ என்றாள். நானும் ‘பரவாயில்லைப்பா’ என்றபடி நகர்ந்தேன். அவளைப் பார்க்கும்போதெல்லாம்
சரவணராஜ் அண்ணனும் அவள் அக்காவும் கை கோர்த்து வருவது போலவே தோன்றும்.
2006, ஏப்ரல் 17 திங்கட்கிழமை c# exam முடித்துவிட்டு மதியம் 1.25 க்கு வெளியே வந்தேன். என் மகேஸ்வரி அக்காவுக்கு பேசுவதற்காக STD போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். என் எதிரே பாண்டிலக்ஷ்மி ம்மா, மகாலக்ஷ்மி கன்னுக்குட்டி, தெய்வானை மூன்றுபேரும் எதிரே வந்து ‘xerox எடுக்கப் போகிறோம் சுரேஷ்’ என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனார்கள். அதன்பிறகு கல்பனா வந்தாள். அவள் சேலை கட்டியிருந்தாள் ‘என்னப்பா விசேசம்?’ என்றேன். ‘இன்று என் பிறந்த நாள் சுரேஷ்’ என்றாள். சாக்லேட் நீட்டினாள். நான் வாங்கிக்கொண்டேன். ‘எனக்கு படிப்பு முடிந்துவிட்டது சுரேஷ். இனிமேல் நாமிருவரும் பார்க்க முடியாது.’ என்று சொன்னாள். ‘உன் சோபனா அக்காவை ஒருநபர் (நான்) நலம் விசாரித்ததாக சொல்லுப்பா.’ என்றேன். என் குரல் தளுதளுத்தது. கண்ணீர் வந்தது. தலையைக் குனிந்துகொண்டு அவள் முகத்தை பார்க்காமலேயே விடுதி நோக்கி நடந்தேன். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.


சோபனா உன் அக்கா!
சோபனா என் தங்கை!
இவள்தானே நம் அன்பிற்குப் பாலம்!
என்றும் குன்றாது நம்நட்பின் ஆழம்!!

நான் முகவையில் படித்தவன்!
உன்னைவிட அகவையில் சிறியவன்!
கள்ளங்கபடமற்றது உன்னுருவம்!
மழலை மாறாதது என்பருவம்!!
உன்னுள் ஆண்மை கலந்த பெண்மை!
என்னுள் மென்மை கலந்த ஆண்மை!!

உன் பிறந்தநாளை
இனி நீ மறக்கமாட்டாய்!!

நான் உன்னைப் பிரியும்போது
கண்ணீர் என்கண்ணில்! – என்னுயிர்
இம்மண்ணைவிட்டுப் பிரியும்போது
என்ன நேரும் உன்னில்?!!

No comments: