Sunday, September 4, 2011

அருள்வாய் தேவி!

ஆண்மை பெருகட்டும்! – என்னுள்
அகந்தை அழியட்டும்!!
அன்பில் உறையட்டும்! என்மதி
அறிவிற் சிறக்கட்டும்!!
தேகம் மெலியட்டும்! – என்னுள்
சோகம் ஒழியட்டும்!!
கோபம் குறையட்டும்! – முன்ஜென்ம
சாபம் பொசுங்கட்டும்! – என்னுள்
செம்மை பிறக்கட்டும்!!
விதியின் வழியை
மதியால் வெல்ல
வழியுரைப்பாய் தேவி! – என்றும்
உன்னருளே என்மனதில் மேவி!!

No comments: