Sunday, September 4, 2011

உன் நினைவில்...

பூச்சூடி வந்தமகள் பாவையவள் தந்தபுகழ்
மச்சந்தான் கொஞ்சமடி மதிமயக்கும் நெஞ்சமடி
அச்சமில்லை உனைப்பாட ஆசைவந்து அணைபோட
கச்சணிந்த முன்னழகு காவியமோ உன்னழகு!!

எத்தனையோ தமிழிலுண்டு எழில்கொஞ்சும் உனைக்கண்டு
சுத்தமான தங்கமடி சூழ்ந்தபலா அங்கமடி
இரத்தத்தில் வேகமடி இரதியே புதுஇராகமடி
சித்தத்தில் உன்நினைவு சிறுபெண்ணே உன்நினைவு!!

No comments: