Sunday, September 18, 2011

முத்துக்குமார்

29-08-2011 திங்கள் அன்று செங்கொடி என்ற பெண் தீக்கிரையானதாக செய்தி வெளியானது. அன்றிரவு மணி 11.30, படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். படுக்கையை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தேன். பேனா எடுத்தேன். இந்த கவிதையை எழுதினேன். ‘கவிதைகள் மட்டுமே எழுத முடிகிறது. வேறு என்ன செய்ய முடியும் என்னால்?’ என்ற குற்ற உணர்வு மட்டுமே என் உடல் முழுவதும் வியாபித்திருந்தது அந்த நிமிடங்களில்.


ஈழத்தமிழருக்காய்
தீக்குளித்து இறந்துபோன
வீரத்தமிழனே...

தமிழகத்தில் வாழும்
ஈனத்தமிழர்களிடம் – தன்
மானவுணர்வை தட்டிஎழுப்பவா
கனல்மூட்டி இறந்துபோனாய்?

உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?

தமிழகத் தமிழர்கள்
மாறிவிடுவார்கள் என நினைத்து
உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?

இந்தத் தமிழ்மண்ணில்தான்
சாராய ஆறு
கரைபுரண்டு ஓடுகிறதாம்!
ஒரு கணக்கெடுப்பு
சொல்கிறது!!

இலவசம் பரவசம்
கைவசம் மதுரசம்
இது எங்கள் தமிழகம்!!!!!!!!!!!

தீபம் ஏற்றிவைக்கிறார்கள்
உனக்கு
கோபம் வரவில்லை
யாருக்கும்
பாவம் நீ...

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

மணமேடைப் பூக்களெல்லாம்
பிணமேடுகளில்...
காதல் பேசும் கண்களிலெல்லாம்
மரண பீதி...
எகிப்து பிரமிடுகளாய்
இலங்கை...
என்ன செய்தது
இறைக்கை??????????????????

தோண்டத் தோண்ட
பணம் கிடைத்தால்
மகிழ்ச்சி!
தோண்டத் தோண்ட
பிணம் கிடைத்தால்.....
?????????????????????????????????????????????????

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

அன்று நீ...
இன்று செங்கொடி......
இனிவேண்டாம்
போதும்...
இனிவேண்டாம்

போர்ப்படைக்கு வழிகாட்டலாம்!
தீக்குளிக்க வழிகாட்டலாமா????????

பத்திரிகையாளன் நீ
பண்பாளன் நீ
பகுத்தறிவாளன் நீ
சிந்தித்திருக்கலாம்
ஒருநொடி...

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

உன் புகைப்படத்தை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்!
பாரதி பிறந்த இம்மண்ணில்தான்
நீயும் பிறந்திருக்கிறாய்
என என் குழந்தைகளிடம்
எடுத்துச் சொல்ல...

குறிப்பு:
அடுத்த நாள் 30-08-2011 செவ்வாய் அன்று காலை இரு செய்திகள் வெளியாயின ‘ஈழத் தமிழர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தூக்குதண்டனையை நிறைவேற்ற எட்டு வார தடை.’ என்று. கேள்விப்பட்ட போது மனம் இலேசானது. மனதில் நிம்மதி பிறந்தது.

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
௧. தமிழர் எழுச்சி – டிசம்பர் ௨௦௧௩

No comments: