Getup guys getup guys
Getup getup getup guys
Open your eyes sunlight says
Getup guys getup guys
Success says surprise says
Getup guys getup guys
Lot of ways are before your eyes
Getup guys getup guys
Come on boys come on girls
Getup guys getup guys
Getup guys getup guys
Getup getup getup guys
Sunday, October 30, 2011
பே(தா)ய்நாடு!!!!!!!
பணக்காரர்கள் பயன்படுத்தத்
தேவையே இல்லாத
பேருந்துகளை
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்
ஏழைஎளியவர்களும்
வசதி குறைந்த
நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே..!!
இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்
இருகைகளின் உதவியோடு
நின்றபடியே பயணித்து
சேருமிடம் செல்லநினைக்கும்
அன்றாடங்காய்ச்சி எவனும்
சொகுசுப்பேருந்துகளையோ
குளிர்சாதனப்பேருந்துகளையோ
எதிர்பார்க்காத சூழலிலும்
உலக வரலாற்றிலேயே
பயணச்சீட்டுகளின் மூலம்
பகல்கொள்ளையடிக்கும்
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட
போக்குவரத்துக்கழகம் அமைந்த
பெருமைமிக்க(?????????????)
எங்கள் பே(தா)ய்நாடு
தமிழ்நாடு தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011
தேவையே இல்லாத
பேருந்துகளை
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்
ஏழைஎளியவர்களும்
வசதி குறைந்த
நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே..!!
இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்
இருகைகளின் உதவியோடு
நின்றபடியே பயணித்து
சேருமிடம் செல்லநினைக்கும்
அன்றாடங்காய்ச்சி எவனும்
சொகுசுப்பேருந்துகளையோ
குளிர்சாதனப்பேருந்துகளையோ
எதிர்பார்க்காத சூழலிலும்
உலக வரலாற்றிலேயே
பயணச்சீட்டுகளின் மூலம்
பகல்கொள்ளையடிக்கும்
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட
போக்குவரத்துக்கழகம் அமைந்த
பெருமைமிக்க(?????????????)
எங்கள் பே(தா)ய்நாடு
தமிழ்நாடு தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011
பகல்கொள்ளை!!!
ப்ளாக்கில்
டிக்கெட் விற்பது
சினிமாதியேட்டர் வாசலில்
மட்டுமல்ல...
எங்கள் மாநகரப்
பேருந்துகளிலும் தான்!!!!!
டிக்கெட் விற்பது
சினிமாதியேட்டர் வாசலில்
மட்டுமல்ல...
எங்கள் மாநகரப்
பேருந்துகளிலும் தான்!!!!!
இரண்டு காதலிகள்!
எனக்கு
இரண்டு காதலிகள்!
உன்னோடு
என் தாய்த்தமிழையும்
சேர்த்து
எனக்கு
இரண்டு காதலிகள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
இரண்டு காதலிகள்!
உன்னோடு
என் தாய்த்தமிழையும்
சேர்த்து
எனக்கு
இரண்டு காதலிகள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
என்ன செய்யப் போகிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே...
முன்தோன்றிய மூத்ததமிழ்
என்றாயே...
காலங்காலமாய்
வாழக் கதியற்றுநிற்கும்
ஈழத்தமிழருக்காய்
நீ என்ன செய்யப் போகிறாய்?
வறுமையை ஒழிப்பேன்
வாக்களியுங்கள்
என்றாயே...
பொறுமையாய்த்தான்
காத்திருக்கிறோம்
வறுமையை ஒழிக்க
நீ என்ன செய்யப் போகிறாய்?
ஜாதிகள் இல்லா
சமத்துவ சமுதாயம் அமைப்போம்
என்றாயே...
ஜாதிச் சான்றிதழுக்காய்
சாதிகள் கேட்கும்
பிள்ளைகளை
என்ன செய்யப் போகிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே...
முன்தோன்றிய மூத்ததமிழ்
என்றாயே...
காலங்காலமாய்
வாழக் கதியற்றுநிற்கும்
ஈழத்தமிழருக்காய்
நீ என்ன செய்யப் போகிறாய்?
வறுமையை ஒழிப்பேன்
வாக்களியுங்கள்
என்றாயே...
பொறுமையாய்த்தான்
காத்திருக்கிறோம்
வறுமையை ஒழிக்க
நீ என்ன செய்யப் போகிறாய்?
ஜாதிகள் இல்லா
சமத்துவ சமுதாயம் அமைப்போம்
என்றாயே...
ஜாதிச் சான்றிதழுக்காய்
சாதிகள் கேட்கும்
பிள்ளைகளை
என்ன செய்யப் போகிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
மணல்வீடு
காற்றடித்தால் கூட
இடிந்துவிழும் எனத்தெரியாமல்
மணல்வீடு கட்டும்
குழந்தைகள் போல்
நான் உன்னோடுசேர்ந்து
காதலெனும் மாளிகை
கட்டினேன்
ஆசையோடு வளர்த்த
காதல்
ஆதரவின்றி நிற்கிறது
இன்று
வாழ்வெனும்
நெடுந்தூரப் பயணத்தில்
நீயின்றி நான்மட்டும்
தனியே நடக்கிறேன்
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
இடிந்துவிழும் எனத்தெரியாமல்
மணல்வீடு கட்டும்
குழந்தைகள் போல்
நான் உன்னோடுசேர்ந்து
காதலெனும் மாளிகை
கட்டினேன்
ஆசையோடு வளர்த்த
காதல்
ஆதரவின்றி நிற்கிறது
இன்று
வாழ்வெனும்
நெடுந்தூரப் பயணத்தில்
நீயின்றி நான்மட்டும்
தனியே நடக்கிறேன்
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
லூசுமழை!
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக்
கடக்க எத்தனித்தேன்
சுட்டெரிக்கும் வெயிலோடு
சடசடவென மழையும்
சேர்ந்து கொண்டது
சாலையோரம் நின்றிருந்த
சிறுமியொருத்தி
செல்லமாய்த் திட்டினாள்
வெயில்மழையை!
‘லூசுமழை’ என்று...
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
கடக்க எத்தனித்தேன்
சுட்டெரிக்கும் வெயிலோடு
சடசடவென மழையும்
சேர்ந்து கொண்டது
சாலையோரம் நின்றிருந்த
சிறுமியொருத்தி
செல்லமாய்த் திட்டினாள்
வெயில்மழையை!
‘லூசுமழை’ என்று...
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
காதல் கீதை!
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...
எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...
எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011
2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...
எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...
எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011
2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
ஆசிரியர்கள்!
வாழ்க்கைப் பயணத்தில்
திசைகள் தெரியாமல்
தத்தளிக்கும் குழந்தைகட்கு
கலங்கரைவிளக்கமாய்
உங்கள் போதனைகளே!
பள்ளிக்குச் செல்கின்ற
பிள்ளைகள் மனதை
பண்படுத்துபவை
உங்கள் போதனைகளே!
அன்னையும் தந்தையும்
முதலிரண்டு கடவுள்களென்றால்
மூன்றாவது கடவுள்
நீங்கள் தானென்று
சொல்லி வைத்தார்கள்
எம்முன்னோர்கள்!
இன்னும் சொல்லப்போனால்
மாதா பிதா
குரு தெய்வம் என
உங்களுக்குப் பிறகுதான்
தெய்வம்!
களிமண்ணுங்கூட
பிடிப்பவர் பிடித்தால்தான்
பிள்ளையார் ஆகுமாம்!
உங்களின்
அன்பான அரவணைப்பே
பிஞ்சு உள்ளங்களை
நெஞ்சில் உரமிக்க
நேதாஜியாய்...
நேர்மைத் திறங்கொண்ட
காந்தியாய்...
பாட்டுத்திறமிக்க
பாரதியாய்...
அன்புக்கே அன்னையான
தெரசாவாய்...
தொண்டுகள் செய்யும்
தேசத்தலைவனாய்...
மாற்றுகிறது!!
மாற்றங்களை நிகழ்த்துவது
நீங்கள்!
உங்களை
வணங்கி மகிழ்வதில்
பெருமை கொள்கிறோம்
நாங்கள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011
திசைகள் தெரியாமல்
தத்தளிக்கும் குழந்தைகட்கு
கலங்கரைவிளக்கமாய்
உங்கள் போதனைகளே!
பள்ளிக்குச் செல்கின்ற
பிள்ளைகள் மனதை
பண்படுத்துபவை
உங்கள் போதனைகளே!
அன்னையும் தந்தையும்
முதலிரண்டு கடவுள்களென்றால்
மூன்றாவது கடவுள்
நீங்கள் தானென்று
சொல்லி வைத்தார்கள்
எம்முன்னோர்கள்!
இன்னும் சொல்லப்போனால்
மாதா பிதா
குரு தெய்வம் என
உங்களுக்குப் பிறகுதான்
தெய்வம்!
களிமண்ணுங்கூட
பிடிப்பவர் பிடித்தால்தான்
பிள்ளையார் ஆகுமாம்!
உங்களின்
அன்பான அரவணைப்பே
பிஞ்சு உள்ளங்களை
நெஞ்சில் உரமிக்க
நேதாஜியாய்...
நேர்மைத் திறங்கொண்ட
காந்தியாய்...
பாட்டுத்திறமிக்க
பாரதியாய்...
அன்புக்கே அன்னையான
தெரசாவாய்...
தொண்டுகள் செய்யும்
தேசத்தலைவனாய்...
மாற்றுகிறது!!
மாற்றங்களை நிகழ்த்துவது
நீங்கள்!
உங்களை
வணங்கி மகிழ்வதில்
பெருமை கொள்கிறோம்
நாங்கள்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011
பசி...
விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
Thursday, October 27, 2011
உனக்கொப்பார் யார்!
பெற்றெடுத்த அன்னையுனை பேணுகிறேன் நலமாக
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!
அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!
புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!
அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!
புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011
காந்தி
அரையாடைக் கிழவனாக அகிம்சையோடு வாழ்ந்தானே
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா
வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் – 06-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) – 14-11-2011
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா
வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் – 06-11-2011
2. பதிவுகள் (இணைய இதழ்) – 14-11-2011
Wednesday, October 19, 2011
துளிப்பா
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும்
தற்காலிகமாய் வேலைகிடைத்தது!
தேர்தல் பிரச்சாரத்தில் கோசம்போட...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
தற்காலிகமாய் வேலைகிடைத்தது!
தேர்தல் பிரச்சாரத்தில் கோசம்போட...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
சொல்லி விடாதீர்கள்
பேன்ட் சட்டை அணிந்த
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்
நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்...
நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி...
நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
2. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011
அனைவருமே
அவன் கண்களுக்கு
கோடீஸ்வரர்கள் தான்
நானும் அப்படித்தான்
தெரிந்திருக்கக் கூடும்!
நான் அவனைக்
கடந்துபோன அந்த சில
நொடிகளில்...
நடைபாதையில்
அமர்ந்திருந்தான் அவன்
கைகளை நீட்டி
என்னிடம் எதையோ
எதிர்பார்த்தபடி...
நிச்சயமாய்
என்னிடம் அவன்
பணத்தையோ உணவையோ தான்
எதிர்பார்த்திருக்கக் கூடும்
கல்வி வணிகமாகிப் போன
எங்கள் பண(ஜன)நாயக நாட்டின்
விலைவாசி ஏற்றத்தால்
இப்பொழுதெல்லாம்
நானுங்கூட அவனைப்போல்
ஒரு நாளைக்கு ஒருமுறையோ
இரு நாட்களுக்கு ஒருமுறையோ தான்
அரைகுறை வயிறோடு
உணவருந்துகிறேன்
என்ற உண்மையை
யாரும் அவனிடம்
சொல்லிவிடாதீர்கள்...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
2. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011
Thursday, October 13, 2011
சோகம்
நேற்று நீ
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி
எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்...
தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ...
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே...!
பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
2. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011
3. இராணிமுத்து - 01-01-2012
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி
எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்...
தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ...
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே...!
பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை...
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
2. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011
3. இராணிமுத்து - 01-01-2012
Wednesday, October 12, 2011
குறிஞ்சி வெண்பா
அரிதாய்ப் பூக்கும் ஆண்டுக்கொரு மலரே
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை - இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை - இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011
Sunday, October 9, 2011
வெல்லுவோம்!
ஜாதிவெறி கொண்டோரை தூக்கிலேற்றுவோம்!
சமுதாய ஆர்வலரை நாமும்போற்றுவோம்!
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்துகாட்டுவோம்!
நெஞ்சினிலே அன்புதனை தினமுமேற்றுவோம்!!
இலங்கையிலே தமிழர்வாழ வழிசெய்குவோம்!
இங்கிருந்தே அவர்களுக்கு உதவிசெய்குவோம்!
முழுமனதாய் மனிதநேயம் பரப்பச்செய்குவோம்!
மதங்களையே ஒன்றிணைக்க வழியும்செய்குவோம்!!
ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்ந்திடல்வேண்டும்!
இலவசமாய் கல்வியிங்கு கிடைத்திடல்வேண்டும்!
கோழைகளாய் வாழ்வதற்கு வெட்கிடவேண்டும்!
கோபுரமாய் தலைநிமிர்ந்து நின்றிடல்வேண்டும்!!
வீதிகளில் வன்முறையை நிறுத்திக்கொள்ளுவோம்!
வேரோடு ஜாதிதனை எரித்துக்கொல்லுவோம்!
இதயங்களில் காதல்தனைப் பரப்பச்சொல்லுவோம்!
இளைஞர்களைப் படைதிரட்டி நாமும்வெல்லுவோம்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 03-11-2011
சமுதாய ஆர்வலரை நாமும்போற்றுவோம்!
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்துகாட்டுவோம்!
நெஞ்சினிலே அன்புதனை தினமுமேற்றுவோம்!!
இலங்கையிலே தமிழர்வாழ வழிசெய்குவோம்!
இங்கிருந்தே அவர்களுக்கு உதவிசெய்குவோம்!
முழுமனதாய் மனிதநேயம் பரப்பச்செய்குவோம்!
மதங்களையே ஒன்றிணைக்க வழியும்செய்குவோம்!!
ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்ந்திடல்வேண்டும்!
இலவசமாய் கல்வியிங்கு கிடைத்திடல்வேண்டும்!
கோழைகளாய் வாழ்வதற்கு வெட்கிடவேண்டும்!
கோபுரமாய் தலைநிமிர்ந்து நின்றிடல்வேண்டும்!!
வீதிகளில் வன்முறையை நிறுத்திக்கொள்ளுவோம்!
வேரோடு ஜாதிதனை எரித்துக்கொல்லுவோம்!
இதயங்களில் காதல்தனைப் பரப்பச்சொல்லுவோம்!
இளைஞர்களைப் படைதிரட்டி நாமும்வெல்லுவோம்!!
இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 03-11-2011
Wednesday, October 5, 2011
துளிப்பா!
பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல்சிதறி
பலியான பரிதாபம்!
ஆயுதபூஜை கொண்டாட்டம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
உடல்சிதறி
பலியான பரிதாபம்!
ஆயுதபூஜை கொண்டாட்டம்!!
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011
Monday, October 3, 2011
Subscribe to:
Posts (Atom)