Thursday, November 10, 2011

செல்லமடி நீ எனக்கு!

குடையை மறந்துவிட்டு
வெளியூர்போன நான்
மழையில் தொப்பலாக நனைந்தபடி
வீட்டிற்குள் நுழைகிறேன்!

மழையில் நனைந்த
தன் கன்றுக்குட்டியை
வாஞ்சையோடு தன்நாவால் நக்கி
ஈரத்தை நீக்கும்
பாசமிக்க தாய்ப்பசுபோலவே
என் செல்லமனைவியான நீ
உன் முந்தானையால்
என் தலைதுவட்டிவிடுகிறாய்
'சளி பிளிக்கும்டா செல்லம்'
என்று செல்லங்கொஞ்சியபடி!

நீ பொழிந்த அன்பாலும்
அரவணைப்பாலும்
உன் கைக்குழந்தையாகவே
மாறிப்போனேன் நான்!

உன் முந்தானையால்
ஒரு தூளிகட்டி
அதில் எனை தூங்கவைத்து
தாலாட்டு பாடுடா என்செல்லம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

2. இராணிமுத்து - 01-02-2012

1 comment:

vetha (kovaikkavi) said...

நல்லாயிருக்கு...சிருங்காரம்...
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com